மயிலாடுதுறை,ஜன.20- மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான்-நாகூரானின் 42 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலை மையில் வெள்ளி மாலை நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.கலைச்செல்வி, காபிரியேல், அம்மை யப்பன்,டி.ஆர்.ராணி, பி.குணசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் வர வேற்று பேசினார்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவரும், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத் துரை, சிஐடியு மாநில துணைப்பொது செய லாளர் கே.திருச்செல்வன், நாகை மாவட்டச் செயலாளரும்,சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொ துச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், சி.விஜயகாந்த், ப.மாரியப் பன், கே.பி.மார்க்ஸ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.
சிஐடியு, வாலிபர், மாணவர், மாதர் சங்க நிர்வாகிகள், அனைத்து சமய நிலங்க ளில் குடியிருப்போர் சங்கம்,மாற்றுத்திற னாளிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட,ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய,விவசாய கூலி தொழிலாளர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் சங்க வளர்ச்சி நிதியாக 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய சிஐடியு
பொதுக்கூட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு இந்திய தொழிற் சங்க மையத்தின்(சிஐடியு) உறுப்பினர்கள் தலா 1 ரூபாய் என 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வளர்ச்சி நிதியாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண் முகத்திடம் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வழங்கி னார்.
கட்சி நிதியாக 7 லட்சத்து 13 ஆயிரத்து 688 ரூபாய்
பொதுக்கூட்டத்தில் கட்சி நிதியாக 7 லட்சத்து 13 ஆயிரத்து 688 ரூபாயை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் வழங்கினார். நிதியை பெற்றுக்கொண்டு பெ.சண்முகம் பேசிய தாவது: 2014 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து வெற்றி பெற்று இந்த நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு நுழைந்த காட்சியை நீங்களெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
நாடாளு மன்ற படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டு உள்ளே நுழைந்தார். ஒரு மகா நடிகர் இந்தியாவிற்கு கிடைத்துள்ளார். அவர் போன்ற ஒரு பிரதமரை இந்தியா இதற்கு முன் பார்த்தது கிடையாது. நடிப்பையே தொழிலாக கொண்டுள்ள நடிகர்கள் கூட இடை இடையே படப்பிடிப்பை நிறுத்து வார்கள். ஆனால் தினந்தோறும் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் நமக்கு பிரதமராக வந்து வாய்த்துள்ளார். தன்னால் முடியாது என்றும் தெரிந்தும் பொய்யான பல வாக்குறுதிகளை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தான் ஆட்சி க்கு வந்ததும் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் பணத்தை வங்கியில் போடுவேன் என்றார். விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமி நாதன் குழு பரிந்துரைத்த விலையை எனது ஆட்சியில் தருவேன் என்றார். 2022க்குள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானம் இரண்டுமடங்காகும் என 2016 விவசாயிகள் மாநாட்டில் கூறினார்.
இப்படி சொன்ன எதையுமே செய்யவில்லை” என்றார். மேலும் அவர் பேசும் போது, “ஆட்சியா ளர்களைப் பார்த்து கேள்விகேட்கும் உரிமையை வழங்கியுள்ள இந்திய அரசியல் சாசனம், பாஜக, மோடி ,ஆர். எஸ்.எஸ் கும்பலுக்கு தொந்தரவாக இருப்பதால் அதை மாற்றி மநுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாச னத்தை எழுத முயற்சிக்கின்றனர். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வெலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி தராமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர்.
பாதிப்பை பார்வையிட வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோயிலில் காசை உண்டியலில் போடாமல் தட்டில் போடுங்கள் என உபதேசம் சொல்லி சென்றுள்ளார். பாபர் மசூதியை இடித்தது தப்பு தான். ஆனால் இடித்தவனுக்கே இடம் சொந்த மென ஒரு தீர்ப்பைக்கூறிய நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு 10 நாளில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக கொடுத்தது. நீதித்துறையை முறைகேடாக பயன்படுத்துகிறது. அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டி குடமுழுக்கு விழாவிற்கு தனி ரயில் விடுகிறார்கள், விமானம் விடுகிறார்கள், நாடு முழுக்க வீட்டில் விளக்கேற்றச் சொல்கின்றனர்.
விடுமுறை அறிவிக்கின்றனர். அரசியல் சுயலாபத்திற்காக மதத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். வருகிற பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தேர்த லில் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலை ஆட்சியி லிருந்து அகற்றுவதே தலையாய கடமையாக மார்க்சிஸ்ட் கட்சி தீர்மா னித்துள்ளது” என்று கூறினார். நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவம் நன்றி கூறினார்.